கல்முனை நூலகத்தின் ஏற்பாட்டில் விசேட செயலமர்வு



எம்.எம்.அஸ்லம்-
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு 'அறிவார்ந்த சமூகத்திற்கான வகுப்பு' எனும் தொனிப்பொருளில் கல்முனை பொது நூலகம் ஒழுங்கு செய்திருந்த நூலக தகவல் தேடுகை பொறிமுறை எனும் தலைப்பில் விசேட பயிற்சி செயலமர்வு ஒன்று திங்கட்கிழமை மருதமுனை சமூக வள நிலையத்தில் நடைபெற்றது.

கல்முணை மநகர முதல்வர், ஆணையாளர் மற்றும் பிரதி ஆணையாளர் ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை பொது நூலகத்தின் நூலகர் ஏ.சி.அன்வர் சதாத் தலைமையில் இடம்பெற்ற இச்செயலமர்வில் கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட உதவி நூலகர் பீ.பிரசாந்தன் வளவாளராகக் கலந்து கொண்டு விரிவுரைகளை நிகழ்த்தினார்.

இதில் கல்முனை மாநகர சபையின் கீழ் இயங்கும் கல்முனை, மருதமுனை, சாய்ந்தமருது, நற்பிட்டிமுனை ஆகிய 04 பொது நூலகங்களின் நூலகர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட 40 ஊழியர்கள் பங்கேற்றிருந்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :