இடமாற்றம் பெற்று வந்த உதவி கல்வி பணிப்பாளர் தயாளனுக்கு வரவேற்பு!



வி.ரி. சகாதேவராஜா-
திருக்கோவில் கல்வி வலயத்தில் இருந்து இடமாற்றம் பெற்று சம்மாந்துறை வலயத்திற்கு வருகை தந்திருக்கின்ற உதவி கல்வி பணிப்பாளர் பூ.பரமதயாளனுக்கு, கோரக்கர் தமிழ் மகாவித்தியாலயத்தில் வரவேற்பு விழா நடைபெற்றது.
திருக்கோவில் வலயத்தில் ஐந்து வருடங்கள் கடமையாற்றிய இலங்கை கல்வி நிர்வாக சேவையைச்சேர்ந்த பரமதயாளன் வீரமுனையைச் சேர்ந்தவர் .

கோரக்கர் தமிழ் மகா வித்தியாலய அதிபர் பி. இளங்கோ தலைமையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் ஊர் சார்பில் கோரக்கர் ஆலய தலைவர் வி. மோகன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள் .

ஆரம்பக்கல்வித்துறையில் தேர்ச்சி பெற்ற பரமதயாளன் சம்மாந்துறை வலயத்தில் ஆரம்பக் கல்வித்துறை அபிவிருத்தியிலும், நாவிதன்வெளிக்கோட்ட கல்வி அபிவிருத்தியிலும் பாரியபங்காற்ற வேண்டும் என்று வாழ்த்தி பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :