வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு உலர் உணவுகளை கொள்வனவு செய்ய வவுச்சர்கள் வழங்கி வைப்பு



ஹஸ்பர்-
ம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் வாழும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான உலர் உணவுப் பொதிகளை பெறுவதற்கான வவுச்சர் இன்று (17) வழங்கி வைக்கப்பட்டது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் ஒபர் நிறுவனம் ஊடாக சுமார் தலா 19500 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகளை பெறுவதற்கான வவுச்சர்கள் உரிய பயனாளிகளிடத்தில் வழங்கப்பட்டன.
20 குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இதில் அத்தியவசிய பொருட்களை பெறுவதற்கான பட்டியலும் உள்ளடக்கப்பட்டிருந்தன. இதனை கார்கில்ஸ் புட்சிட்டி மூலம் கொள்வனவு செய்து கொள்ளலாம். இதன் போது உரையாற்றிய பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி உணவு உற்பத்தியினை வீட்டுத் தோட்டங்களின் மூலமாக நாமே அதிகரிக்க வேண்டும் அப்போதுதான் உணவு பற்றாக்குறை தீர்க்கப்படும் தானும் தனது வீட்டுத் தோட்டத்தில் பல உற்பத்திகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஏ ஆர்.எம்.சித்திக்,பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் மஹிந்த வனசிங்க,ஒபர் நிறுவன ஊழியர்கள் ,பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :