வியட்நாம் தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் மட்டு. நகரில் "வர்த்தக மேம்பாட்டு" கருத்தரங்கு



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
கொழும்பிலுள்ள வியட்நாம் தூதுவராலயம் ஏற்பாடு செய்துள்ள "வர்த்தக மேம்பாட்டு" கருத்தரங்கொன்று நாளை (11) வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்பில் அமைந்துள்ள பாசிக்குடா அமாயா பீச் ஹோட்டலில் நடைபெறும்.
இலங்கையின் வியட்நாம் தூதுவர் ஹோ தாய் தான் ஹுஸ் தலைமையில் நடைபெறும் இக்கருத்தரங்கில், கிழக்கு மாகாண மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த முன்னணி தொழில் முயற்சியாளர்கள் 70 பேரளவு கலந்து கொள்ளவுள்ளதாக கருத்தரங்கின் ஏற்பாட்டாளரும் அக்குறணை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான ஹமீட் ஏ காதர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் கௌரவ அதிதியாகக் கலந்து கொள்ளும் இக்கருத்தரங்கில், காத்தான்குடி பிரதேச சபையின் தலைவர் முஹம்மட் அஸ்வர் உட்பட பல பிரமுகர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
வியட்நாம் - இலங்கை வர்த்தக முயற்சிகளை மேம்படுத்தும் ஒரு முயற்சியாக தூதுவராலயம் நடாத்தும் 2ஆவது கருத்தரங்கு இதுவாகும். இதற்கு முன் கண்டியில் இந்தக் கருத்தரங்கு நடைபெற்றதும் அது பல வெற்றிகரமான பலன்களை அளித்துள்ளதாகவும் ஏற்பாட்டாளர் ஹமீட் ஏ காதர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :