மாவீரர் தின நிகழ்வை நடாத்த வேண்டாம்! திருக்கோவில் போலீசார் எழுத்து மூலம் அறிவிப்பு!



காரைதீவு சகா-
திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கஞ்சி குடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று (27) ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருக்கின்ற மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதில் இருந்து தவிர்க்குமாறும் அதிலிருந்து உடனடியாக விலகி நிற்குமாறும் திருக்கோவில் போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி அறிவித்துள்ளார்.

பொத்துவில் பிரதேச சபையின் உப தவிசாளர் பெருமாள் பார்த்திபனுக்கு இந்த அறிவுறுத்தல் கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று 27ஆம் தேதி கஞ்சிகுடிச்சாறு புலிகள் இயக்கத்தின் மயான பூமியில் புதைக்கப்பட்டுள்ள மரணித்த புலிகளை நினைவு கூரவுள்ள மாவீரர் தின நிகழ்வுகளை செயல்படுத்த வேண்டாம் என்று அவர் கேட்டுள்ளார் .

மேலும் அந்த மயான பூமியில் புதைக்கப்பட்டுள்ள மரணித்த புலிகள் இயக்க உறுப்பினர்களின் தாய் தந்தை மற்றும் உறவினர்களால் மீண்டும் புலிகள் இயக்கத்தினை எழுச்சி பெறும் வகையில் இறந்த உறுப்பினர்களை நினைவு கூரும் வகையில் நடத்த இருக்கின்ற மாவீரர் தின நிகழ்வுகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
2011 .08. 29ஆம் தேதி இலங்கையின் ஜனநாயக சோசலிசக் குடியரசின் இலக்கம் 1721(02) கீழ் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலமாக தடை செய்யப்பட்டுள்ளதுடன் புலிகள் இயக்கம் தொடர்பான எந்தவித செயல்பாடுகளோ நிகழ்வுகளோ நடத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே அதை மீறி இவ்வாறான நிகழ்வுகளில் கலந்து கொண்டால் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என்பதை தெரிவிக்கிறேன்.

இவ்வாறு திருக்கோவில் போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி அறிவுறுத்தல் விடுத்துள்ளார்..
பிரதி அக்கரைப்பற்று பிரதி பொலிஸ் அத்தியட்சகருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :