ஓட்டமாவடி - மஜ்மா நகரில் யானை தாக்கி வயோதிபர் மரணம்



எச்.எம்.எம்.பர்ஸான்-
யானை தாக்கி நபரொருவர் மரணமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் ஓட்டமாவடி - மஜ்மா நகர் பகுதியில் வைத்து இன்று (25) காலை இடம்பெற்றுள்ளது.

ஓட்டமாவடி - மீராவோடை பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தையான எஸ். எம். காசிம் என்பவர் மஜ்மா நகரிலுள்ள அவரது தோட்டத்திற்கு சென்ற போதே அவர் யானை தாக்கி மரணமடைந்துள்ளார்.

இவ்வாறு மரணமடைந்த நபரின் உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :