ஒரு நாள் ஒரு வேலைத் திட்டத்தின் கீழ் உதயம் விழிப்புலனற்றோர் நிலையத்திற்கு உதவி!



சகா-
"ஒருநாள் ஒரு வேலைத் திட்டம் " என்ற நிகழ்ச்சிச் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு கல்லடி உதயம் விழிப்புலனற்றோர் நிலையத்திற்கு நேற்று உதவி வழங்கப்பட்டது.

கிழக்கின் சமூக செயற்பாட்டாளரும் ,காரைதீவு பிரதேச சபை தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலின் இத் திட்டத்தின் கீழ் நேற்று இந்த விஜயம் இடம்பெற்றது.அவருடன் சமூக செயற்பாட்டாளரான வி.ரி.சகாதேவராஜாவும் சமுகமளித்திருந்தார்.
புலம்பெயர் தேசத்தில் இருக்கக்கூடிய சில தாயகப் பற்றுள்ள பரோபகாரிகளின் உதவியோடு இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

நேற்று, உதயம் நிலைய தலைவர் விமல் முன்னிலையில் அவர்களுக்கு நிதிஉதவி வழங்கியதோடு விருந்துபசாரமும் இடம்பெற்றது.
தொடர்ச்சியாக ஒளிவிழா வின் போது உலர்உணவு வழங்குகின்ற நிகழ்ச்சி திட்டத்தையும் முன்னெடுக்க வேண்டும் என்று உதயம் விழிப்புலனற்றோர் சங்க தலைவர் விமல் கேட்டுக் கொண்டதற்கு தவிசாளர் இணங்கினார்.
எதிர்வரும் மார்கழி மாதத்தில் அந்த திட்டம் முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :