இன்று காரைதீவு 12 இல் திடீர் டெங்கு களப் பரிசோதனை! 16 வீடுகளுக்கு றெட் நோட்டீஸ்!!



வி.ரி. சகாதேவராஜா-
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வசீர் தலைமையில் காரைதீவு 12 மற்றும் மாளிகைக்காடு பிரதேசத்தில் விசேட டெங்கு கள பரிசோதனை நேற்றுமுன்தினம் (29) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நேற்றுமுன்தினம் மட்டும் 469 வீடுகள் பரிசோதனை செய்யப்பட்டன.
டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்களை வைத்திருந்த 16 வீடுகளுக்கு சிவப்பு அறிவித்தல்களும் வழங்கப்பட்டுள்ளது.
இப் பரிசோதனை யில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நுளம்பு கள தடுப்பு பிரிவினர்கள், காரைதீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,GN,EDO,SDO, போலீஸ் உத்தியோகத்தர்களும்,பொதுமக்களும் இணைந்து டெங்கு தள தடுப்பு பரிசோதனையில் கலந்து கொண்டார்கள்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :