பெண்கள் வலையமைப்பினால் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்போம் 16 ம் நாள் திருகோணமலையில்



ஹஸ்பர்-
திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பினால் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்போம் என்ற தொனிப்பொருளில் நேற்று (14) 16ம் நாள் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

இந் நிகழ்வினையொட்டி கப்பல்துறையிலிருந்து திருகோணமலை வரை மரதன் ஓட்டப் போட்டி இடம்பெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கான முதல் பரிசு 25000/=, இரண்டாம் பரிசு 20000/= ,மூன்றாம் பரிசு 15000/= வழங்கப்பட்டது.

ஆறுதல் பரிசு 10 பேருக்கு 3000/= வழங்கப்பட்டது
குறித்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக திருகோணமலை மாவட்ட செயலாளர் பி.எச்.என். ஜெயவிக்ரம மற்றும்
மனித உரிமைகள் ஆணைக்குழு மாவட்ட இணைப்பாளர் இஸ்ஸதீன்,

அகம் மனிதாபிமான வளநிலைய பிரதி இணைப்பாளர் அ.மதன்
திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி பிரசாந்தினி உதயகுமார் உட்பட
கந்தளாய் ,வெருகல் ,தம்பலகாமம் ,குச்சவெளி ,மூதூர் பிரதேச பெண்கள் மற்றும் இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :