இன்று ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரது 200 ஆவது அகவை நிறைவினை முன்னிட்டு அம்பாறையில் யாகம்





வி.ரி.சகாதேவராஜா-
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரது 200 ஆவது அகவை நிறைவினை முன்னிட்டு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிழக்கிலங்கை இந்துக் குருமார்களினால் நடத்தப்படும் மஹா யாகம் நிகழ்வானது இன்று புதன்கிழமை அதிகாலை 5 .00மணி முதல் காலை 7 மணி வரை
பெரிய நீலாவணை ஸ்ரீ மஹா விஷ்ணு வேதஸ்தானத்தில் இடம் பெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிகழ்வானது ஆலயதரிசனம் என்னும் நிகழ்வினுடாக இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் தமிழ் சேவை தென்றல் அலைவரிசையில் நேரடியாக 6.30 மணிக்கு ஒலிபரப்பு செய்யப்படும்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு வே ஜெகதிஸன் கலந்து கொள்வதுடன் கெளரவ அதிதியாக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு ரி.ஜெ. அதிசயராஜ் ,மற்று இந்து குருமார்கள்,ஆலயதர்மகர்த்தாக்கள், அறநெறி பாடசாலை ஆசிரியர்கள்,மாணவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

ஏற்பாடுகளை மாவட்ட இந்து சமய கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு கு.ஜெயராஜி மேற்கொண்டுள்ளார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :