தோடம்பழ காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் பஸ்மீர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைவு..!





எம்.என்.எம்.அப்ராஸ்-
ம்பாரை மாவட்டம் காரைதீவு பிரதேச சபை சுயேட்சை குழு(தோடம்பழ உறுப்பினர்) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னால் மாளிகைக்காடு பிரதேச அமைப்பாளரும்,ஐக்கிய சமூக சேவை நலன்புரி ஒன்றியத்தின் தலைவரும், மாளிகைக்காடு மேற்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவருமான ஏ.ஆர்.முஹம்மட் பஸ்மீர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசில் இன்று (17)இணைந்து கொண்டார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அம்பாரை மாவட்டத்திற்க்கு விஜயம் மேற்கொண்ட நிலையில் கட்சி தலைவர் முன்னிலையில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார்.

இதன் போது கல்முனை மாநகர பிரதி முதல்வரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ரஹ்மத் மன்சூர்,காரைதீவு பிரதேச பிரதேச சபை உறுப்பினரும்,ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மாளிகைக்காடு அமைப்பாளர் எஸ்.எம்.இஸ்மாயில்,ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மாளிகைக்காடு கிழக்கு வட்டார அமைப்பாளர் எம்.எச்.நாஸர்,முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் கட்சியின் அமபாரை மாவட்ட குழுச் செயலாளர் ஏ.சி.சமால்டீன் உட்பட பஸ்மீர் அவர்களின் இணைப்பு செயலாளர் எம்.எம்.றெஜிமீர் மற்றும் கட்சியின் முக்கியஸ்த்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :