முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகைக்குட்பட்டிருந்த இறக்காமம் பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் தோல்வி



அபு அலா -
முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகைக்குட்பட்டிருந்த இறக்காமம் பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் தோல்வியடைந்துள்ளது.

இறக்காமம் பிரதேச சபையின் அமர்வு இன்று (13) தவிசாளர் ஜெமில் காரியப்பர் தலைமையில் இடம்பெற்றபோது 2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது, வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக 6 உறுப்பினர்களும், எதிராக 7 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உபதவிசாளர் நௌபர் மௌலவி, அன்வர், பாஹிமா, பொதுஜன பெரமுன கட்சியின் சிறியலதா மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தவிசாளர் ஜெமில் காரியப்பர், நிர்மலா ஆகியோர் வாக்களித்தனர்.

வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் தவிசாளர் கலிலுர் றஹ்மான், றபாய்டீன், சுலைஹா, சுல்பிகார் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆஸிக், நைஸர், முஸ்மி ஆகியோர் எதிர்த்து வாக்களித்தனர்.

இதன் மூலம் இறக்காமம் பிரதேச சபையின் 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் தோல்வியடைந்தது.

முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டில் உள்ள இறக்காமம் பிரதேச சபையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் 3 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தமையே வரவு செலவுத்திட்டம் தோல்வியடைந்தமைக்கு முக்கிய காரணமாகும்.

இறக்காமம் பிரதேச சபையில் மொத்தமாக 13 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :