கல்முனையில் நிணநீர் தேக்கவீக்க முகாமைத்துவ பயிற்சி பட்டறை!



வி.ரி. சகாதேவராஜா-
ல்முனை ஆதரவைத்தியசாலையில் நிணநீர் தேக்க வீக்க முகாமைத்துவம் மற்றும் யானைக்கால் நோய் ஏற்படாமல் தடுத்தல் சம்பந்தமான பயிற்சிப் பட்டறை ஒன்று இடம் பெற்றது.

இப் பட்டறை கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி டாக்டர் இரா. முரளீஸ்வரன் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வளவாளர்களாக பிரபல சமூக வைத்திய நிபுணர் டாக்டர் முரளி வள்ளிபுரநாதன் மற்றும் பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் சமீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது நிணநீர் தேக்க வீக்கம் எவ்வாறு ஏற்படுகின்றது? இந்நிலை எவ்வாறு ஏற்படாமல் தடுப்பது? இந்நிலை ஏற்பட்டால் எவ்வாறு பராமரிப்பு வழங்க வேண்டும்? இந்நோய் நிலையின் போது செய்யப்படும் சத்திர சிகிச்சைகள் பற்றிய தெளிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

வளவாளர்களின் விளக்க உரைகளுக்கேற்ப தாதிய உத்தியோகத்தர்களின் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

பிரதி வைத்திய அத்தியட்சகர் டாக்டர் சாமித்தம்பி இராஜேந்திரன் நன்றியுரையாற்றினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :