நாளை ஆறுமுக நாவலர் குருபூஜை! புத்தகங்கள் அமோக விற்பனை!



வி.ரி.சகாதேவராஜா-
ழத்தில் சைவமும் தமிழும் வளர்த்த நல்லை நகர் ஆறுமுக நாவலர் பெருமானின் குருபூஜை நாளை (14) புதன்கிழமை ஆகும்.

அதனை முன்னிட்டு இன்று அம்பாறை பெரிய நீலாவணை விஷ்ணு ஆலயத்தில் அந்தர் யாகம் சைவப் பிராமணர்களால் நடாத்தப்படவுள்ளது.

இந்து சமய கலாசார அம்பாறை மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி இதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.

இதேவேளை, ஆறுமுக நாவலர் பெருமான் ஆண்டை முன்னிட்டு இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்த புத்தக கண்காட்சியும், விற்பனையும் காரைதீவு விபுலானந்த மணி மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.

முதல் நாள் மட்டும் , சுமார் இரண்டு லட்சம் வரை அமோக விற்பனை இடம்பெற்றது.இவ் விற்பனைக்கு மட்டக்களப்பு மாவட்ட இந்து கலாச்சார உத்தியோகத்தர் திருமதி எழில்வாணி பத்மகுமார் பொறுப்பாளராக செயற்பட்டார்.
நேற்றும் பாடசாலை மாணவர்கள் சகிதம் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

இந்த நான்கு நாள் கண்காட்சி மற்றும் விற்பனை நாளை (14) புதன்கிழமை மாலை 5 மணி வரை நடைபெற்று நிறைவடையவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :