சுத்தமான குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம்



எஸ்.எம்.எம்.முர்ஷித் -
கோறளைப்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் பாலைநகர் கிராமத்தில் உள்ள மக்களுக்கு சுத்தமான குடிநீர் இணைப்பினை இலவசமாக வழங்கும் திட்டத்தினை அனீஸ் ஹாஜியார் பவுன்டேஷன் முன்னெடுத்து வருகின்றது.

இதன் ஆரம்ப கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் பதினொரு குடும்ப அங்கத்தவர்களுக்கு இணைப்புக்கான பணம் செலுத்தப்பட்ட பற்றச்சிட்டு வழங்கும் நிகழ்வு பாலைநகர் றஹ்மானியா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம் பெற்றது.

பள்ளிவாயல் செயலாளர் ஏ.யூ.அசனார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அதிதிகளாக அனீஸ் ஹாஜியார் பவுன்டேஷனின் திட்ட இணைப்பாளர் ஆர்.எம்.புஹாரி, ஓட்டமாவடி பிரதேச சபையின் தியாவட்டவான் வட்டாரத்திற்கான உறுப்பினர் ஏ.ஜி. அஸீஸூல் றஹீம், கிராம சேவை உத்தியோகத்தர் எம்.எம்.அன்வர் சதாத், ஓட்டமாவடி வர்த்தக சங்க தலைவரும் சமுக சேவையாளருமாகிய எம்.ஏ.சி.எம்.நியாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பாலைநகர் கிராமத்திற்கான குடிநீர் இணைப்பு கட்டம் கட்டமாக அனைத்து குடும்பத்திற்கும் வழங்கப்படுவதுடன் ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவுகளில் இதுவரை அனீஸ் ஹாஜியார் பவுன்டேசனினால் இலவசமாக 450 மேற்பட்ட குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டுள்ளதாக அனீஸ் ஹாஜியார் பவுன்டேஷனின் திட்ட இணைப்பாளர் ஆர்.எம்.புஹாரி தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :