நிறைகுறைந்த குழந்தைகளுக்கு பால்மா பக்கட்டுகள் வழங்கி வைப்பு



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
ரசாங்கத்தினால் நிறைகுறைந்த குழந்தைகளின் வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில் பிரதேச செயலகம் தோரும் பல்வேறு வேலைத்திட்டங்களை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இதன் அடிப்படையில் ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட கிராமங்களான காவத்தமுனை மற்றும் மாஞ்சோலை கிராம சேவகர் பிரிவுகளில் 03வயதிற்கு குறைந்த குழந்தைகளில் நிறை குறைந்த குழந்தைகளுக்கு பொன்டேரா (குழவெநசசய) நிறுவனத்தின் அனுசரனையில் பால்மா பொதிகள் வழங்கும் நிகழ்வு காவத்தமுனை மற்றும் மாஞ்சோலை கிராமங்களில் இடம் பெற்றது.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சிபார்சில் தெரிவு செய்யபட்ட குழந்தைகளுக்கு இராணுவத்தின் ஒத்துழைப்புடன் ஓட்டமாவடி பிரதேச செயலகத்தினால் தெரிவு செய்யப்பட்ட 59 குழந்தைகளுக்கு தலா ஒரு குழந்தைக்கு 400 கிராம் பால்மா பக்கட்டுகள் இரண்டு வீதம் வழங்கி வைக்கப்பட்டன.

ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் பிரதி திட்ட பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இராணுவத்தின் 04வது கெமுனுஹேவா படையணியின் அதிகாரி லெப்டினன் அரவிந்த அபேரத்ன, ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஏ.எல்.நௌபர், பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவல அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு பால்மா பொதிகளை வழங்கி வைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :