சித்தாண்டியில் புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் பலி!



ஏறாவூர் சாதிக் அகமட்-
நேற்றிரவு (17/12) மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதம் சித்தாண்டியூடாக பயணிக்கையில் தண்டாவளத்திலிருந்து எழுந்த இளைஞன் ஒருவர் புகையிரதத்தால் மோதுண்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.
சடலம் அவ்விடத்திலிருந்த வேளை அவரது தந்தையினால் அடையாளம் காணப்பட்டு ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இம் மரணம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட சந்திவெளி பொலிசார், திடீர் மரண விசாரணை அதிகாரி MSM நஸீர் அர்களுடன் இன்று (18/12) காலை ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு சென்றபோது ,சடலத்தை பார்வையிட்டு , பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை கொண்டு செல்லுமாறு மரண லிசாரணை அதிகாரி பொலிசாருக்கு கட்டளை பிறப்பித்தார்.

சம்பவத்தில் மரணமடைந்த இளைஞன் மாவடிவேம்பை சேர்ந்த பாலச்சந்திரன் சுஜீவகுமார் (32) என அடையாளம் காணப்பட்டது.

மது போதையுடன் புகையிரத தண்டாவத்தில் இருந்து எழும்ப முடியாத நிலையில்தான் விபத்தில் பலியாகியுள்ளார் என உறவினர்கள் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :