கூட்டுறவு பணியாளர் கௌரவிப்பு விழா



வி.ரி. சகாதேவராஜா-
ண்முனை தென்மேற்கு பல்நோக்கு கூட்டுறவு சங்கம் கூட்டுறவு பணியாளர்களுக்கான கௌரவிப்பு விழாவை நேற்று முன்தினம் நடத்தியது.

சங்கத் தலைவர் ஏ. கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கிழக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் பொறியியலாளர். என் சிவலிங்கம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே .வி .தங்கவேல் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார்.
அங்கு முனைக்காடு நாகசக்தி கலா மன்றத்தின் பாரம்பரிய நாட்டுக்கூத்து நிகழ்வு விசேஷமாக இடம்பெற்றது.

அங்கு சாதனை படைத்த கூட்டுறவு பணியாளர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு சீருடையும் வழங்கப்பட்டது. கூட்டுறவு சங்க முன்னாள் தலைவரும் அதிபருமான சிவ.அகிலேஸ்வரனும் உரையாற்றினார். கூட்டுறவு சங்க பொது முகாமையாளர் க. சுதாகரன் நன்றியுரையாற்றினார்.கூடவே வருட இறுதி நிகழ்வுகளும் நடைபெற்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :