ஓட்டமாவடி கல்விக் கோட்ட பாடசாலைகளின் வகுப்பறை போட்டி பரிசளிப்பு நிகழ்வு



எச்.எம்.எம்.பர்ஸான்-
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகத்தினால் நடாத்தப்பட்ட வகுப்பறை அழகுபடுத்தல் போட்டியில் வெற்றிபெற்ற பாடசாலைகளுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை (21) இடம்பெற்றது.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டத்தின் கீழுள்ள ஆரம்பப் பிரிவு பாடசாலைகளின் வகுப்புகளுக்கு மத்தியில் வகுப்பறை அழகுபடுத்தல் போட்டி நடைபெற்றது.

மாணவர்களுக்கு மத்தியில் நல்லதோர் வகுப்பறை சூழலை உருவாக்கி மகிழ்ச்சியான கற்றலை வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இப் போட்டியில் முதலாம் இடத்தை ஓட்டமாவடி சரீப் அலி வித்தியாலயம், இரண்டாம் இடத்தை மீராவோடை அமீர் அலி வித்தியாலயம், மூன்றாம் இடத்தை ஓட்டமாவடி தாருல் உலூம் ஆகியவை பெற்றுக் கொண்டது.
இப் போட்டியில் வெற்றிபெற்ற மூன்று பாடசாலைகளுக்கு பணப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், கலந்து கொண்ட அனைத்துப் பாடசாலைகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ஜே.எப்.றிப்கா, ஜே.தாஜுன் நிஸா மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர்காளான எம்.ஐ.அஹ்ஸாப், ஏ.எம்.ஜாபீர் கரீம், ஆசிரிய ஆலோசகர்களான எம்.பி.டி.கான், எம்.பி.எம்.சித்தீக், எஸ்.எம்.கடாபி, நிமலதாஸன் மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :