ஹிங்குறாகொட பிரதேசத்தில் ஆயுதங்கள் மற்றும் வாளுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
பொலன்னறுவை-ஹிங்குறாகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிங்குறாகொட பிரதேசத்தில் ஆயுதங்கள் மற்றும் வாளுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து ஒரு மைக்ரோ பிஸ்டல், இரண்டு நாட்டுத்துப்பாக்கி, துப்பாக்கி ரவைகள், வாள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

3 MIC இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு
கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய விஷேட அதிரடிப் படையினருடன் சேர்ந்து மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போதே வீடொன்றிலிருந்து குறித்த சந்தேக நபர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மேலதிக சட்ட நடவடிக்காக சான்றுப் பொருட்களுடன் ஹிங்குறாகொட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை ஹிங்குறாகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :