ஏறாவூர் புன்னக்குடா வில் உருக்குலைந்த நிலையில் ஆணிண் சடலமொன்று கண்டெடுப்பு.



ஏறாவூர் சாதிக் அகமட்-
ன்று (17/12)காலை 09.00 மணியளவில் புன்னக்குடா பனைமரக் காட்டுக்குள் விறகு எடுக்கச் சென்ற சகோதரர் ஒருவர் துர்நாற்றம் வீசுவதை அவதானித்து, அத்திசை நோக்கி சென்று அவதானித்த போது நாவ மரக் கிளையில் உருக்குலைந்த நிலையில் சடலமொன்று தொங்குவதை அவதானித்து

உடன் ஏறாவூர் பொலிஸில் முறைப்பாட்டினை பதிவு செய்தார்.

உடன் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் தடயங்களை அவதானித்துவிட்டு தடயவியல் பொலிசாருக்கும், திடீர் மரண விசாரணை அதிகாரிக்கும் விடயத்தை தெரிவித்து குறித்த பிரதேச கிராம சேவை உத்தியோகத்தருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்
கடந்த 25/11 அன்று தனது விறகு எடுக்க சென்ற சகோதரனை காணவில்லையென 28/11 அன்று பொலிஸில் ஏறாவூர். தாமரைக்கேணியை சேர்ந்த சவுரியதும்மா என்ஈற பெண்மணி முறைப்பாடு செய்திருந்ததால் அவரை தேடி விடயத்தை தெரிவித்து அழைத்து வந்து சடலத்தை அடையாளம் கண்டுள்ளனர்.
அவர் அணிந்திருந்த சப்பாத்து, சாரன் என்பவற்றை கண்டே அடையாளம் கண்டுள்ளார். தம்பிலெப்பை ரம்ளான் (54) என்பராவார்

சம்பவ இடத்திற்கு தடயவியல் பொலிசாருடனும் ஏறாவூர் பொலிசாருடனும் சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி MSM நஸீர் விசாரணைகளை முன்னெடுத்து பிரேத பரிசோதனைக்காக சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தார்

மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :