கோறளைப்பற்று வாழைச்சேனை மத்தி பிரதேச செயலகத்துக்குட்பட்ட தியாவட்டவான் தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரி மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (4) இடம்பெற்றது.
கல்லூரியின் அதிபர் காலாநிதி எம்.பி.எஸ்.இஸ்மாயில் மதனி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இம்முறை க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் சிறந்த புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் சினைவுச் சின்னங்கள் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன், க.பொ.த சாதாரண தர வகுப்பு மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில், அதிதிகளாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.பீர் முகம்மட் காஸிமி மற்றும் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், உலமாக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment