சாய்ந்தமருது தைபா அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவிகளை அனுமதிக்கான விண்ணப்பம் கோரல்



எம்.எம்.அஸ்லம்-
சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவிகளை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

இம்முறை ஜீ.சி.ஈ.சாதாரண தரப் பரீட்சை எழுதிய அல்-குர்ஆனை நன்கு ஓதத் தெரிந்த மாணவிகள் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.

ஆர்வமுள்ள தகுதியான மாணவிகள், சாய்ந்தமருது பொலிவேரியன் நகரில் அமைந்துள்ள கல்லூரியின் நிர்வாக காரியாலயத்தில் விண்ணப்பப் படிவங்களை பெற்று, அதனைப் பூர்த்தி செய்து, எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னதாக சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

அனுமதி வழங்குவதற்குரிய மாணவிகளை தேர்வு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 10ஆம் திகதி சனிக்கிழமை மற்றும் 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களிலும் முற்பகல் 10.00 மணி தொடக்கம் பிற்பகல் 1.00 இடம்பெறும் என அறிவிக்கப்படுகிறது.

அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி (எம்.ஏ.) அவர்களை முதல்வராகக் கொண்டு கடந்த 2012ஆம் ஆண்டு தொடக்கம் இயங்கி வருகின்ற சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரியில் மௌலவியா பட்டத்திற்கான அல்ஆலிம் இஸ்லாமிய கற்கை நெறி போதிக்கப்படுவதுடன் ஜீ.சி.ஈ. உயர் தரப் பரீட்சைக்கும் மாணவிகள் தயார்படுத்தப்படுகின்றனர்.

இதுவரை 30 மாணவிகள் இக்கல்லூரியில் இருந்து மௌலவியா பட்டம் பெற்று வெளியேறியுள்ளனர்.

அதேவேளை, இவர்களுள் பல மாணவிகள் பல்கலைக்கழக அனுமதி பெற்று, உயர் கல்வி கற்று வருவதுடன் கற்கைகளை பூர்த்தி செய்த சிலர் பல்கலை பட்டம் பெற்று வெளியேறியுமுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :