தேசிய உற்பத்தி திறன் போட்டியில் தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்கு மூன்றாமிடம்



ஹஸ்பர்-
தேசிய உற்பத்திதிறன் செயலகத்தால் அரச திணைக்களங்களுக்கிடையே 2020ஆம் ஆண்டுக்காக நடைபெற்ற தேசிய உற்பத்தி திறன் போட்டிக்கான விருது வழங்கும் நிகழ்வு கொழும்பில் நேற்றைய
தினம் 15.12.2022 நடைபெற்றது.

இதில் தம்பலகாமம் பிரதேச செயலகம் தேசிய மட்டத்தில் மூன்றாமிடத்தை பெற்றுக் கொண்டது.

கொழும்பு அலரி மாளிகையில் இடம் பெற்ற விருது வழங்கல் வைபவத்தில் பிரதம அதிதியாக பிரதம அமைச்சர் தினேஸ் குணவர்தன கலந்து கொண்டார்.

இதன் போது தொழில் உறவுகள் அமைச்சர் மனுச நாணயக்காரமிடருந்து தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி இதற்கான விருதினை பெற்றுக் கொண்டார்...
இவ் விருது கிடைக்கப் பெறுவதற்கு உழைத்த பிரதேச செயலக சக உத்தியோகத்தர்களுக்கும் பிரதேச செயலாளர் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றார்.

இதில் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப் அவர்களும் உடனிருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :