சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலயத்தில் 5 மாணவர்கள் சித்தி



நூருல் ஹுதா உமர்-
வ்வாண்டு 2022 (2023) வெளிவந்த புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின்படி கல்முனை கல்வி வலயத்தின் சாய்ந்தமருது கமு/கமு/லீடர் எம்.எச்.எம் அஸ்ரப் வித்தியாலயத்தில் 5 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது பாடசாலையின் வரலாற்றில் ஒரு வரலாற்றுச் சாதனையாகும் என பாடசாலை அதிபர் எம்.ஐ.சம்சுதீன் தெரிவித்தார். அத்தோடு ஏ.ஜி.முகம்மத் அஹ்னப் என்ற மாணவன் 178 புள்ளிகள் பெற்று சாய்ந்தமருது கோட்டத்தில் முதலாமிடம் பெற்றுள்ளதோடு கல்முனை வலய மட்டத்தில் இரண்டாமிடம் பெற்று பாடசாலைக்கு பெருமை தேடித் தந்ததுள்ளதாகவும் இம்மாணவர்களுக்கும் இவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் தமது வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக அதிபர் எம்.ஐ.சம்சுதீன் குறிப்பிட்டார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :