சாய்ந்தமருதில் ஆண்டு 6-9 மாணவர்களுக்கான தார்மீக வளர்ச்சி திட்ட செயலமர்வு!


சாய்ந்தமருது "சிறந்த நடைமுறை மற்றும் வழிகாட்டுதலுக்கான சமூகம்" (SGPG) ஏற்பாடு செய்திருந்த நட்ப்புகளின் புதல்வர்களுக்கான Moral Development Programme SGPG அமைப்பின் தலைவர் ஏ.ஆர்.எம்.நளீம் தலைமையில் சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

அமைப்பின் பிரதிச் செயலாளர் எஸ். இம்தியாஸ் அவர்களின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற குறித்த செயலமர்வில்

கழிவுப் பொருட்களைப் பயன்படுத்தி சூழல் நேய ஆக்கங்கள் மாணவர்களால் குறுகிய கால அவகாசத்தில் தயார் செய்யப்பட்டது

பிள்ளைகளுக்கான வழிகாட்டல் மற்றும் பயிற்றுவித்தல் நிகழ்ச்சிகள் 4 விடயப் பரப்புகளை கொண்டிருந்தன.

1. பிள்ளைகள் வீட்டு சூழலில் பெற்றோருக்கு கட்டுப்படுவது, கண்ணியப்படுத்துதல், மகிழ்வித்தல் என்ற எண்ணக் கரு.

2.ஆன்மீக பலத்தை அடைவதற்கான வழிகாட்டலை கொடுத்தல்.

3. வெளி சவால்களை சாமர்த்தியமாக வெற்றி கொள்ளல் எனும் தொனிப் பொருளில் நட்பு நட்பு வட்டம், டிவி, வீடியோ கேம், போன் பாவனை, சமூக வலைத்தளம், பாதைப் பொருள் மரம்பல் போன்றவற்றின் மத்தியில் பிள்ளைகள் சமநிலை தவறாது நடக்க வழிகாட்டல்.

4. பலமான உடல் எனும் தொனிப் பொருளில் உடல் ஆரோக்கியம், உணவுப் பழக்கம், விளையாட்டு போன்றவற்றினிடையே சமநிலை பேண வழிகாட்டல்.

நிகழ்வு மாணவர்களின் ஆற்றல்களை விருத்தி செய்யும் வகையில் வினாக்கள் அமைந்திருத்தன

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :