ஓட்டமாவடியில் சிறுவர்களுக்கு போசாக்கை அதிகரிக்கும் திட்டம்



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
ற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினையினால் மாணவர்களின் போஷாக்கு குறைபாடு காணப்படுகின்றது சிறுவர்களின் போஷாக்கினை அதிகரிப்பதற்காக ஓட்டமாவடி பிரதேச செயலகத்தினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் ஓட்டமாவடி அஸ் ஸலாஹியா முன்பள்ளி பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு போஷாக்கான உணவுகளை வழங்குவதில் பொருளாதார பிரச்சினை உள்ளதாகவும் குறித்த பிரச்சினைக்கான தீர்வை பெற்றுத்தருமாறும் கோரியதற்கிணங்க அஸ்ஸலாஹியா முன்பள்ளி நிருவாகம் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகம் ஊடாக வன்னி ஹோப் தன்னார்வ நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.

அந்தவகையில் அஸ்ஸலாஹியா முன்பள்ளிக்கு வாரத்தில் மூன்று நாட்களுக்கு போஷாக்கான உணவை வழங்குவதற்காக 250,000 ரூபாய் நிதி உதவியை வன்னி ஹோப் நேற்று (17.02.2023) வழங்கி வைத்தது.
இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக கணக்காளர் எம்.ஐ.எஸ். சஜ்ஜாத் அஹமட், வன்னி ஹோப் -இலங்கை பணிப்பாளர் எம்.டி.எம். பாரிஸ், அமைப்பின் கள உத்தியோகத்தர் ரதிகலா, ஊடக இணைப்பாளர் பி. வஸீம், பிரதேச செயலக சுதேச வைத்திய அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எம்.எம். நஜீம், அஸ்ஸலாஹியா முன்பள்ளி ஆசிரியைகள் மற்றும் அதன் நிருவாக உறுப்பினர்களும் கலந்து கொணடனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :