எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தின் பிரபஞ்சம் திட்டத்திற்கு பொதுநலவாய தூதுக்குழுவினர் பாராட்டுத் தெரிவிப்பு.




பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் பெட்ரிசியா ஸ்கொட்லான்ட் உள்ளிட்ட குழுவினர் நேற்று முன்தினம் (03) பிற்பகல் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை சந்தித்தனர்.

இங்கு தூதுக்குழு பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவருடன் நீண்ட நேரம் கலந்துரையாடியதோடு,

பொதுநலவாய அமைப்பினால் இந்த ஆண்டு இளைஞர்களின் ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும்,இளைஞர் சமூகத்தினரின் தகவல் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தி,அவர்களை ஆயத்தப்படுத்துவதில் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கவனம் திரும்பியுள்ளதாக செயலாளர் நாயகம் எதிர்க்கட்சித் தலைவரிடம் தெரிவித்தார்.

இந்நாட்டுப் பாடசாலைகளில் கல்வி கற்கும் சிறார்களின் கணனி அறிவை மேம்படுத்தும் வகையில் எதிர்க்கட்சித் தலைவரின் எண்ணக்கருவாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பிரபஞ்சம் நிகழ்ச்சித்திட்டத்திற்கு பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட குழுவினர் எதிர்க்கட்சித் தலைவருக்கு தமது பாராட்டுக்களை தெரிவித்தனர்.

பொதுநலவாய நாடுகளின் உதவிச் செயலாளர் நாயகம் பேராசிரியர் லுயிஸ் பிரான்சிஸ், செயலாளர் நாயக அலுவலகத்தின் பணியாளர்கள் குழாம் தலைமை அதிகாரியும்,சிரேஷ்ட பணிப்பாளருமான தெபோரா ஜெமிசன்,ஆளுகை மற்றும் சமாதான இயக்குநகரகத்தின் ஆசிய பிராந்திய ஆலோசகரும்,தலைவருமான கலாநிதி தினுஷா பண்டிதரத்ன, தொடர்பாடல் அதிகாரியும் ஊடக மற்றும் பொதுமக்கள் விவகார அதிகாரியான எமி கொல்ஸ் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :