தொல்லியல் ஆய்வாளர் நவநாயகமூர்த்தியை வீடுதேடிச்சென்று பாராட்டு.



வி.ரி. சகாதேவராஜா-
மிகப்பெரும் ஆய்வாளரும் தொல்லியலாளருமான 'கலாபூஷணம்' நா.நவநாயகமூர்த்தி அவர்களை அம்பாறை மாவட்ட திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தினர் வீடுதேடிச்சென்று பாராட்டிக் கெளரவித்தனர்.

எழுத்தாளர் நவநாயகமூர்த்தியால் எழுதப்பட்டு அண்மையில் வெளியிடப்பட்ட அம்பாரை மாவட்ட அக்கரைப்பற்று பிரதேச மக்களின் வரலாற்று ஆவணமாக கருதப்படும் 'பண்டைய மட்டக்களப்பு வரலாற்றில் அக்கரைப்பற்றும் தமிழரும்'
எனும் மிகப்பெரும் ஆய்வு நூலை தந்தமைக்காக இப்பாராட்டு நேற்று முன்தினம் (16)இடம் பெற்றது.
குருகுலப்பணிப்பாளர் கண இராஜரெத்தினம் தலைமையிலான குழுவினர் எழுத்தாளருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :