“இயற்கையோடு இணைந்த வாழ்வை நாடுவோம்“ : ஆயுர்வேத பாதுகாப்புச் சபையினால் விசேட நிகழ்வுகள்



நூருல் ஹுதா உமர்-
“இயற்கையோடு இணைந்த வாழ்வை நாடுவோம்“ எனும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு உரைகள், புதிய உறுப்பினர்களுக்கு உறுப்புரிமை அடையாள அட்டை சான்றிதழ் வழங்குதல், மார்க்க உரையுடன் இப்தார் ஆகிய நிகழ்வுகள் கல்முனைப் பிராந்திய ஆயுர்வேதப்பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.ஏ. நபீல் அவர்களின் ஒருங்கிணைப்பில் சம்மாந்துறை ஆயுர்வேத வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.சீ.எம் காலித் தலைமையில் சம்மாந்துறை டிராசத்துல் இஸ்லாமிய்யா அறபுக்கலாசாலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ எல் எம் றிபாஸ் அவர்களும் கௌரவ அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ் எல் எம் ஹனிபா அவர்களும் விசேட அதிதிகளாக சம்மாந்துறை வலய கல்வி பணிப்பாளர் டாக்டர் எஸ் எம் எம் சையத் உமர் மௌலானா அவர்களும் உதவிப் பிரதேச செயலாளர் யூ.எம். அஸ்லம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :