வேலோடுமலை முருகனாலய வருடாந்த அலங்காரம் உற்சவம் ஆரம்பம்!



வி.ரி. சகாதேவராஜா-
ழத்து பழனி என அழைக்கப்படும் சித்தாண்டி வேலோடு மலை முருகன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவப் பெருவிழா நேற்று 30 ஆம் தேதி வியாழக்கிழமை ஆரம்பமாகியது.

தொடர்ச்சியாக ஆறு நாட்கள் திருவிழா இடம்பெற்று ஏழாம் நாள் ஏப்ரல் ஐந்தாம் தேதி தீர்த்தோற்சவத்துடன் பெரு விழா நிறைவடைய இருக்கிறது என ஆலய தர்மகர்த்தா சுப்ரமணியம் தியாகராஜா தெரிவித்தார்.

நேற்று 30ஆம் தேதி வியாழக்கிழமை சித்தாண்டி பொதுமக்களின் திருவிழாவாக இடம்பெற்றது.நேற்று காலை ஐந்து முப்பது மணிக்கு சித்தாண்டி பிள்ளையார் ஆலயத்திலிருந்து பாதயாத்திரை ஆரம்பித்து முருகனாலயத்தை சென்றடைந்தது.
.அதேபோன்று நான்காம் தேதி காலை 5 மணிக்கு வந்தாறுமூலை பொதுமக்களின் திருவிழா ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலயத்தில் இருந்து பாற்குடபவனி இடம் பெறும்.
சித்தாண்டி மாவடி வேம்பு கொம்மாதுறை தேவபுரம் கோரலங்கேணி வந்தாறுமூலை மற்றும் ஆலயதிருவிழா குழுவினரால் இந்த ஏழு நாள் திருவிழாக்கள் இடம்பெற இருக்கின்றது.

பிரதம குரு சிவஸ்ரீ கு.க. அரவிந்த குருக்கள் தலைமையில் உற்சவம் தொடர்ச்சியாக இடம் பெறும் என்று ஆலய பரிபாலன சபை தர்மகர்த்தா சுப்பிரமணியம் தியாகராஜா தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :