சம்மாந்துறையில் '2015 O/L Batch foundation அமைப்பின் இப்தார் ஒன்றுகூடல் நிகழ்வு!



சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்-
ம்மாந்துறை பிரதேசத்தில் '2015 O/L Batch foundation அமைப்பின் 8 வருட பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இவ் இப்தார் நிகழ்வு அமைப்பின் தலைவரும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினருமான அமீர் அப்fனான் தலைமையிலும் சில உறுப்பினர்களின் அனுசரணை ஏற்பாட்டில் சம்மாந்துறை தேசிய பாடசாலை வளாகத்தில் நேற்று (18) நடைபெற்றது.

மேலும் அங்கத்தவர்களின் குடும்ப உறுப்பினர்களில் மரணித்த தாய்,தந்தை, சகோதர மற்றும் சகோதரிகள் அனைவருக்காகவும் துஆ பிராத்தனையும்,ரமலான் நற்சிந்தனையும் அமைப்பின் உறுப்பினர் மௌலவி அஸ்லி அவர்களால் நிகழ்த்தப்பட்டது.

சம்மாந்துறை மற்றும் மாவடிப்பள்ளி எல்லைக்குட்பட்ட 1999ம் ஆண்டில் பிறந்த ஆண்கள் அனைவரையும்அங்கத்தவராகக் கொண்டு செயற்படுகின்றது.

இருந்தபோதும் "ஒற்றுமையே பலம் நண்பர்களேஉலகம்" எனும்தொனிப்பொருளில் கடந்த 8ஆண்டுகளாக பல லட்சத்திற்கும் அதிகமான பணத்தினை தனவந்தர்கள்,சமூக ஆர்வளர்கள்,நலன்விரும்பிகள் மூலமாக திரட்டி பல சமூக சேவைவேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிகழ்வில் அமைப்பின் 100க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :