சாய்ந்தமருது பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பினால் உத்தியோகத்தர்கள் கௌரவிப்பு !



நூருல் ஹுதா உமர்-
சாய்ந்தமருது பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் ஏற்பாட்டில் அபிவிருத்தி உத்தியோகத்தர் றிகாஸா ஷர்பீனின் நெறிப்படுத்தலில் பிரதேச செயலாளர் எம்.எம் ஆஷிக் தலைமையில் இப்தாரும் பெண் சமுர்த்தி முகாமையாளர் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கௌரவிப்பும் மாளிகைக்காடு தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீசன் கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில் கெளரவ அதிதியாக அம்பாரை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் எம். எஸ்.எம். சப்ராஸ், சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முவஃபிகா, தலைமைப் பீட சமுர்த்தி முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம், சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் செயலாளர் ஐ.எல்.எம்.மன்சூர், சமுர்த்தி முகாமையாளர் எஸ்.றிபாயா, சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் றியாத் ஏ.மஜீத், நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சீ.எம். பழில், நிதி உதவியாளர் ஏ.சி.முஹம்மட், கல்முனை பிரதேச செயலக தலைமைப் பீட சமுர்த்தி முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ், சமுர்த்தி முகாமையாளர்களான எம்.எம்.முபீன், எம்.எஸ்.எம்.மனாஸ், அந்நூர் சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவர் ஏ.அலாவுதீன் உள்ளிட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட அங்கத்தவர்கள், கிராம மட்ட சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

நிகழ்வில் மார்க்க சொற்பொழிவினை மெளலவி ஏ.அஷ்ரஃப் நிகழ்த்தினார். இதன்போது கடந்த சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை
சாய்ந்தமருது - 17 அந்நூர் சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவர் ஏ.அலாவுதீனின் அனுசரணையில் சமுர்த்தி கெளரவிப்பு" நிகழ்வு இடம்பெற்றது. சமுர்த்தி கெளரவிப்பில் சமுர்த்தி முகாமையாளராக பதவியுயர்வு பெற்ற றியாத் ஏ.மஜீத், சாய்ந்தமருது பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பினை சிறந்த முறையில் வழிகாட்டி மக்கள் பணியாற்றி வரும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எப்.றிகாஸா ஷர்பீன், அர்ப்பணிப்புடன் மக்கள் ஆற்றிய சமுர்த்தி முகாமையாளர் எஸ்.றிபாயா, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எம்.ஆர்.எஸ். ஷாமிலா, எம்.எஸ். நூருல் றிபா, எல்.ஜி.எம்.மும்தாஜ் மர்யம், ஜே.எம். றம்ஸா உள்ளிட்ட சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் பிரதிநிதிகள் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :