கடலரிப்பினால் திருக்கோவில் மயானம் ஆபத்தில்..



வி.ரி.சகாதேவராஜா-
திருக்கோவில் பிரதேச மயானம் கடலரிப்பின் ஆபத்துக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறது .
கடந்த சில நாட்களாக திருக்கோவில் மயான பிரதேசத்தில் கடல் அரிப்பு மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.
அதன் காரணமாக அங்கிருந்த கல்லறைகள் சில கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு இருக்கின்றன .

மயானப்பிரதேசமும் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக திருக்கோவில் உதவி பிரதேச செயலாளர் கந்தவனம் சதிசேகரனிடம் கேட்டபோது.
மயானப்பகுதி வழமை போல கடல் அரிப்புக்கு உள்ளாகி வருகின்றது உண்மை . கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினர் அங்கு கல் போடுவதற்கான ஏற்பாடுகளை செய்து இருக்கின்றார்கள். என்றார்.

கடந்த காலங்களில் திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்திற்கு முன்பாக பாரிய கடலரிப்பு ஏற்பட்டிருந்த வேளையிலே கல்லணை போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :