கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலய வித்தியாரம்ப விழா



பாறுக் ஷிஹான்-
ல்முனை கமு/கமு/அஸ்-ஸுஹறா வித்தியாலயம் தரம் 1 க்கு மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப விழா இன்று செவ்வாய்கிழமை(25) கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் எம் .எச்.எஸ்.ஆர்.மஜீதிய்யா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.என்.வரனியா (திட்டமிடல் பிரிவு) கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் கெளரவ அதிதிகளாக பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் எம்.ரீ.எம்.அனப் ,பாடசாலையின் பழைய மாணவர் சங்க செயலாளர் யூ. இஸட்.அஜ்வத், உறுப்பினர்கள், பெற்றோர்கள் ,ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் நலன்விரும்பிகள் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் அதிதிகளால் மாணவர்களுக்கு அகரம் எழுதப்பழக்கிய நிகழ்வும் இடம்பெற்ற அதேவேளை மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் இனிப்புகளும் வழங்கப்பட்டன.

அத்துடன் தரம் ஒன்று மாணவர்களினால் பாடசாலைக்கு கத்தரி,வெண்டி ,தக்காளி , மிளகாய் கன்றுகள் கொண்ட சாடிகளும் அன்பளிப்புச் செய்யப்பட்டது.இதன் மூலம் பாடசாலையில் பசுமைப் புரட்சியை மாணவர்கள் மூலம் ஏற்படுத்த வழிகாட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பாடசாலையில் தரம் 2 இல் கல்வி பயிலும் மாணவர்கள் மாலை அணிவித்து புதிதாக அனுமதி பெற்ற 193 தரம் 1 மாணவர்களையும் வரவேற்றனர்.

















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :