அம்பாறை மாவட்டத்தில் ஒரே ஒரு தமிழ் உத்தியோகத்தர் நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு!



வி.ரி.சகாதேவராஜா-
ம்பாறை மாவட்டத்தில் இம்முறை வெளியான முகாமைத்துவ உதவியாளர் சூப்பரா ரக பரீட்சையில் ஒரே ஒரு தமிழ் உத்தியோகத்தர் தெரிவாகி இருக்கின்றார்.
காரைதீவு பிரதேச செயலகத்தின் நிதி உதவியாளராக பணியாற்றும் ஆர்.கணேசமூர்த்தி இவ்வாறு சூப்பரா பரீட்சையில் சித்தி அடைந்து நிர்வாக உத்தியோகத்தராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

காரைதீவைச் சேர்ந்த கணேசமூர்த்தி முன்னர் கல்முனை வடக்கு பிரதேச செயலக பதில் நிருவாக உத்தியோகத்தராக பல வருடங்கள் சேவையாற்றி வந்தார்.
அடுத்த வாரம் அவருக்கான புதிய பிரதேச செயலக ஸ்தானம் வழங்கப்பட இருக்கின்றது. பெரும்பாலும் திருக்கோவில் பிரதேச செயலகம் வழங்கப்படலாமெனத் தெரியவருகிறது.

அம்பாறை மாவட்டத்தில் இப் பரீட்சையில் தெரிவான ஏனையோர் அனைவரும் சிங்கள முஸ்லிம் உத்தியோகத்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :