பல்லின சமூகத்தினருடன் வாழ்கின்ற போது பிரச்சினைகளை நல்லிணக்கத்தின் அடிப்படையில் தீர்த்துக் கொள்வதே சிறந்ததாகும்.-அப்துல் அஸீஸ்



பாறுக் ஷிஹான்-
ல்முனைப் பிராந்தியத்தில் பொதுவாக எல்லைப் பிரச்சினைகள் இருந்து வருகின்ற போது காணிப்பிரச்சினைகள் தலைதூக்குவதன் காரணமாக முரண்பாடுகள் தோன்றுவதாகவும், பல்லின சகத்தினருடன் வாழ்கின்ற போது பிரச்சினைகள் அதிகரித்தாலும் நல்லிணக்கத்தின் அடிப்படையில் அவற்றைத் தீர்த்துக் கொள்வதே சிறந்ததாகும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய மனித உரிமைகள் அதிகாரி அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சிவில் குழுவின் கலந்துரையடல் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கல்முனை காரியாலயத்தில் பிராந்திய மனித உரிமைகள் அதிகாரி அப்துல் அஸீஸ் தலைமையில் இன்று இடம்பெற்ற போது சிவில் சமூகத்தினர் கருத்துத் தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

இன்றைய காலகட்டத்தில் எமது பிரதேசங்களில் தலைவிரித்து தாண்டபமாடுகின்ற பிரச்சினையாக காணிப் பிர்ச்சினை இருக்கிறது எனவும் பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழி மூலம் கையாளக்கூடிய அதிகாரிகள் பற்றாற்குறை காரணமாக பெரிதும் சிரமப்படுவதாகவும் இன்று எமது பிரதேசங்களில் போதைவஸ்துப் பாவனை மேலோங்கி நிற்பதன் காரணமாக குடும்ப வன்முறைகள் தலையோங்கி நிற்பதாகவும் இதனால் இளைஞர்களும் யுவதிகளும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

குறிப்பாக இத் தவறுகளை செய்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதன் மூலம் உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். ஆனால் இன்று மிகக் கூடுதலாக நடப்பதென்னவென்றால் அடிப்படை உரிமைகளை அனுபவித்து வருகின்றவர்களுக்கெதிராக அச்சுறுத்தல் விடுத்து தேவையற்ற விசாரணைகளுக்கு அழைத்து மனரீதியாக பாதிப்பை ஏற்படுத்துவது இல்லாதொழிக்கப்பட வேண்டுமென மேலும் தெரிவித்தனர்.
இது பற்றிய விரிவான அறிக்கையினை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர் பீடத்திற்கு அறிவிப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :