சாய்ந்தமருதில் "சமுர்த்தி அபிமானி" வர்த்தக கண்காட்சியும் விற்பனையும் : அரசாங்க அதிபர்கள் தொடக்கி வைத்தனர் !



நூருல் ஹுதா உமர்-
சாய்ந்தமருதில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு "சமுர்த்தி அபிமானி" வர்த்தக கண்காட்சியும் விற்பனையும் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று திங்கள் (17), நாளை செவ்வாய் (18) ஆகிய இரு தினங்களில் பி.ப. 3.00 மணி - இரவு 10.00 மணி வரை கடற்கரை வீதியில் அமைந்துள்ள பெளசி விளையாட்டு மைதானத்தில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் தலைமையில் நடைபெற்று வருகின்றது.

இன்றைய நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.எஸ். டக்லஸ் கலந்து கொண்டு கண்காட்சி கூடங்களை திறந்து வைத்தார். மேலும் இந்நிகழ்வுக்கு அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ.ஜெகதீஸன், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்ராஸ், உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிகா, தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளர் ஏ.சி.ஏ. நஜீம், முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.எல்.யூ.ஜுனைதா, சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.றிபாயா, சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் றியாத் ஏ.மஜீத், பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம். பழீல் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தத்தார்கள் மற்றும் பல அதிதிகள் கலந்து கொண்டனர்.

நோன்புப் பெருநாளைக்கு தேவையான அனைத்து விதமான பொருட்களையும் இலாபகரமாக இக்கண்காட்சி கூடங்களில் பெற்றுக்கொள்ளலாம். இக்கண்காட்சியின் மூலம் உள்ளூர் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதே பிரதான நோக்கமாகும்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :