கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மியின் சேவையைப் பாராட்டி கெளரவிப்பு



பாறுக் ஷிஹான்-
ல்முனை மாநகர சபையின் ஆணையாளராக கடமையேற்று வினைத்திறனாக சேவையாற்றிக்கொண்டிருக்கும் ஏ. எல். எம். அஸ்மியின் நேர்த்தியானதும் நேர்மையானதுமான சேவையைப் பாராட்டி கல்முனை மாநகர மக்களால் கெளரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

கல்முனையன்ஸ் போரத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு தனியார் வரவேற்பு மண்டபத்தில் கடந்த செவ்வாய் கிழமை (18) இடம்பெற்ற போதே இக்கெளரவம் ஆணையாளருக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கடமையைப் பொறுப்பேற்ற குறுகிய காலத்திற்குள் காத்திரமான பல முன்னெடுப்புக்களை முன்னெடுத்து சேவையை வழங்கிக்கொண்டிருக்கும் ஆணையாளரின் சேவையைப் பாராட்டியே இக்கெளரவம் கல்முனை மக்கள் சார்பாக கல்முனையன்ஸ் போரமினால் வழங்கப்பட்டது.

மாநகர ஆணையாளருக்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அப்துல் ரஸாக் ஜவாத், தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர், கல்முனையின் முதுசம் நஸீர் ஹாஜி மற்றும் கல்முனையன்ஸ் போரத்தின் தலைவர் முபாரிஸ் எம். ஹனீபா ஆகியோரால் பொன்னாடை போர்த்தி இக்கெளரவம் வழங்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :