கிழக்கு மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைவாக கல்முனை மாநகர சபையினால் எதிர்வரும் 16ஆம் திகதி டெங்கு ஒழிப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு, விஷேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை (11) பிற்பகல், மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் மாநகர சபையின் பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம், பொறியியலாளர் ஏ.ஜே.எச்.ஜௌஸி, வேலைகள் அத்தியட்சகர் எம்.உதயகுமரன், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் வர்மன் மற்றும் சுதாதார மேற்பார்வையாளர்களும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது எதிர்வரும் 16ஆம் திகதியன்று கல்முனை மாநகர சபைக்குட்பட்ட அனைத்து பிரதேசங்களிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான வேலைத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் மாநகர ஆணையாளரினால் சுகாதார மேற்பார்வையாளர்களுக்கு
தேவையான ஆலோசனைகளும் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.
அத்துடன் கல்முனை மாநகரை டெங்கு அற்ற பிரதேசமாக பேணிப் பாதுகாக்கும் பொருட்டு வாரத்தில் ஒரு தினம் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதெனவும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் முன்னெடுக்கப்படும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு மாநகர சபை முழுமையான ஒத்துழைப்புகளை வழங்குவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும், பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
0 comments :
Post a Comment