கல்முனை மாநகர சபையினால் 16ஆம் திகதி டெங்கு ஒழிப்பு தினமாக பிரகடனம்.!




சாய்ந்தமருது செய்தியாளர்-
கிழக்கு மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைவாக கல்முனை மாநகர சபையினால் எதிர்வரும் 16ஆம் திகதி டெங்கு ஒழிப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு, விஷேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை (11) பிற்பகல், மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் மாநகர சபையின் பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம், பொறியியலாளர் ஏ.ஜே.எச்.ஜௌஸி, வேலைகள் அத்தியட்சகர் எம்.உதயகுமரன், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் வர்மன் மற்றும் சுதாதார மேற்பார்வையாளர்களும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது எதிர்வரும் 16ஆம் திகதியன்று கல்முனை மாநகர சபைக்குட்பட்ட அனைத்து பிரதேசங்களிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கான வேலைத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன் மாநகர ஆணையாளரினால் சுகாதார மேற்பார்வையாளர்களுக்கு
தேவையான ஆலோசனைகளும் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.

அத்துடன் கல்முனை மாநகரை டெங்கு அற்ற பிரதேசமாக பேணிப் பாதுகாக்கும் பொருட்டு வாரத்தில் ஒரு தினம் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதெனவும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் முன்னெடுக்கப்படும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு மாநகர சபை முழுமையான ஒத்துழைப்புகளை வழங்குவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :