உகந்தை மலை முருகன் ஆலய ஆடி வேல் விழா கொடியேற்றம் யூலை18 இல் ;.ஆக.02இல் தீர்த்தம்.



வி.ரி. சகாதேவராஜா-
ரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தை மலை முருகன் ஆலய வருடாந்த ஆடி வேல் விழா உற்சவம் எதிர்வரும் யூலை 18ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.

திருவிழா ஆலய பிரதம குரு சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில் உதவிக் குரு கோபிநாத சர்மா உதவியுடன் சிறப்பாக நடைபெறவுள்ளது.

ஆடிவேல் விழா உற்சவம் தொடர்ந்து 13 நாட்கள் இடம்பெற்று ஆகஸ்ட் 02ஆம் தேதி தீர்த்த உற்சவத்துடன் நிறைவடையை இருப்பதாக ஆலய பரிபாலன சபை வண்ணக்கர் டி.எம்.சுதுநிலமே திசாநாயக்க தெரிவித்தார்.
வழக்கம்போல அன்னதானம் மற்றும் பஸ் போக்குவரத்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இம்முறை கதிர்காமம் முன் கூட்டி வருவதால் உகந்தமலை முருகன் ஆலய ஆடிவேல்விழா மிகவும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, கதிர்காமம் ஆடிவேல் விழா உற்சவத்தை முன்னிட்டு தற்பொழுது பெருந்திரளான பக்தர்கள் அங்கு பாதயாத்திரையாக செல்ல ஆரம்பித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து இலங்கையின் அதிநீண்ட கதிர்காமம் ஆடிவேல்விழா உற்சவ பாதயாத்திரை எதிர்வரும் 6ஆம் திகதி சந்நிதியில் ஆரம்பமாகின்றது.

கதிர்காமம் செல்லும் பாதயாத்திரை அடியார்கள் உகந்தை மலை முருகன் ஆலயவளாகத்தில் தங்கியிருந்து செல்வதுதான் வழக்கம்.
இம் முறை கதிர்காமத்திற்கான ஆடிவேல் விழா எதிர்வரும் யூன் மாதம் 19 இல் கொடியேற்றம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :