வாழைச்சேனை ஆயிஷா மாணவி ஜுமைனா ஹானி தேசிய மட்ட கட்டுரைப் போட்டியில் 2 ஆம் இடம்



எச்.எம்.எம்.பர்ஸான்-
தேசிய மட்ட பொதுநலவாய கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்ட வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய மாணவி ஜே.ஜுமைனா ஹானி தேசிய ரீதியில் 2 ஆம் இடம் பெற்றுள்ளதாக பாடசாலையின் அதிபர் என்.சஹாப்தீன் தெரிவித்தார்.

பாடசாலையில் 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் இவர், 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய மீலாத் பேச்சுப் போட்டியில் தேசியத்தில் முதலிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தேசிய ரீதியாக சாதனைகளை நிலைநாட்டி வரும் மாணவி ஜுமைனா ஹானிக்கும் கட்டுரைப் போட்டியில் 2 ஆம் இடத்தைப் பெற்றுக்கொள்ள பயிற்றுவித்த ஆசிரியர்களான எம்.இந்துராணி, ஏ.எம்.றிஹானா, ஜே.எம்.நியாஸ் ஆகியோர்களுக்கு அதிபர் என்.சஹாப்தீன் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சாதனை படைத்த இவ் மாணவி கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் கடமையாற்றி வரும் பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.கே.ஜௌபரின் புதல்வியாவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :