பெண் தலைமை தாங்கும் 73 குடும்பங்களுக்கான உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு



பாறுக் ஷிஹான்-
ந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் ஏற்பாட்டில் சேவா இன்டர்நேஷனல் பவுண்டேசன் அமைப்பின் அனுசரணையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்க்கு உட்பட்ட பகுதியில் வாழும் பெண் தலைமை தாங்கும் 73 குடும்பங்களுக்கான உலர் உணவு பொருட்கள் நற்பிட்டிமுனை சுமங்களி மண்டபத்தில் இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் கல்முனை பிரதேச பொறுப்பாளர் ஜே.ஆர் . தர்மராஜ் தலைமையில் செவ்வாய்க்கிழமை(30) மாலை இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர் ஏ.அமலதாசன் பிரதம அதிகயாக கலந்து கொண்டார். சிறப்பு அதிதியாக சமாதான நீதவான் எஸ். சண்முகநாதன் நற்பிட்டிமுனை பல நோக்கு கூட்டுரவு சங்க தலைவர் சிறிவேல்ராஜா இரா.குணசிங்கம் நற்பிட்டிமுனை சமய செயற்பாட்டாளர் வி.சிசுபாலன் ஆகியோர் சிறப்பு அதிதியாக கலந்து சிறப்பித்தனர்.

மேலும் நற்பிட்டிமுனை அறநெறிப் பாடசாலை அதிபர் திருமதி. மோகன் ஜெனிதா, நற்பிட்டிமுனை வர்ண கடை உரிமையாளர் ப.கேமதர்சன், இந்து இளைஞர் மன்ற உறுப்பினர் அஸ்நீதன் இந்து ஸ்சுயம் சேவக சங்க அம்பாரை மாவட்ட செயலாளர் வரதராஜன் , சுயம் சேவக உறுப்பினர்களான துலக்சன், காந்தன், உறுப்பினர்கள் துசாந் ஆகியோர் கலந்துகொண்டு வருகை தந்த 73 பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :