கல்முனை ஆதார வைத்தியசாலையில் சித்திரைப் புத்தாண்டு கலாசார விழா !



வி.ரி.சகாதேவராஜா-
ல்முனை ஆதார வைத்தியசாலையில் சித்திரை வருடப்பிறப்பை சிறப்பிக்கும் முகமாக சித்திரைப் புத்தாண்டு கலாசார விழா நேற்று நடைபெற்றது.

வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர்.இரா.முரளீஸ்வரன் தலைமையிலும் பிரதிப் பணிப்பாளர் டாக்டர்.J.மதன் ஒருங்கிணைப்பிலும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் முட்டி உடைத்தல், யானைக்கு கண் வைத்தல், மிட்டாய் சேகரித்தல், சோடாவிற்கு வளையம் போடுதல், பணிஸ் சாப்பிடுதல், பலூன் ஊதி உடைத்தல், வினோத உடைப்போட்டி, சாக்கு ஓட்டம், கயிறு இழுத்தல், சங்கீத கதிரை போன்ற பல விளையாட்டுக்கள் நடத்தப்பட்டு பல பரிசில்களும் வழங்கப்பட்டன.

பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் இரா. முரளீஸ்வரன் உரையாற்றுகையில்....

வைத்தியசாலையில் கொவிட் 19 தொற்றினால் தடைப்பட்டிருந்த இவ்வாறான நிகழ்வுகள் மீண்டும் நடைபெறுவது மகிழ்ச்சியாக உள்ளது. அனைவரும் இந்நிகழ்வில் குழுவாக செயற்படுவது மிகவும் சந்தோசமளிக்கிறது. என்றார்.
போட்டிகளில் வெற்றியீட்டிய வீரர்களுக்கான பரிசு பண வவுச்சருக்கான அனுசரணை வழங்கிய கல்முனை ஹற்றன் நெஷனல் வங்கியின் (HNB) முகாமையாளர் தஅல்பர்ட் நிர்மலகுமார் அவர்களுக்கும் ஏனைய அனுசரணையாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்வின் நிகழ்ச்சிகளை விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவின் பொறுப்புத்தாதிய உத்தியோகத்தர் ஜி.சோழவேந்தன் தொகுத்து வழங்கியதோடு தரமுகாமைத்துவ பொறுப்புத்தாதிய உத்தியோகத்தர் பி..செல்வகுமார் நிகழ்ச்சிகளுக்கான மேலதிக ஒருங்கிணைப்புக்களையும் நடைபெற்ற விளையாட்டுக்களுக்கான நடுவராக இரத்தவங்கியின் பொறுப்புத்தாதிய உத்தியோகத்தர் வி.குலேந்திரகுமார் இந்நிகழ்வுகளுக்கான நிதி சேகரித்தலுக்கான பங்களிப்பினை அதிதீவிரசிகிச்சைப்பிரிவின் பொறுப்புத்தாதிய உத்தியோகத்தர் த
என்.பி..மதுரா அவர்களாலும் ஒழுங்குசெய்யப்பட்டது.

மேலும் பல்வேறு விளையாட்டுக்களில் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்களான மயக்கமருந்து வைத்திய நிபுணர் டாக்டர். மியூரு உதயங்க, குழந்தை நல மருத்துவ நிபுணர்கள் டாக்டர். பிரேமினி மற்றும் டாக்டர்.S.N. ரொஷாந்த், கண் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் நிரோஷன், மகப்பேற்று வைத்திய நிபுணர் டாக்டர் ரசீன் முகமட் மற்றும் கதிரியக்கவியல் வைத்திய நிபுணர் டாக்டர்.மபா(f)ஷா போன்றோர் விளையாட்டுக்களில் கலந்துகொண்டு தங்களது திறமைகளையும் வெளிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது..
இறுதியாக தரமுகாமைத்துவ பொறுப்புத்தாதிய உத்தியோகத்தர் பி.செல்வகுமார் நன்றியுரையுடன் நிகழ்வுகள் முடிவுற்றது.














இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :