திராய்க்கேணி பாடசாலை மாணவர்களுக்கு இணைந்த கரங்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.



நூருல் ஹுதா உமர்-
ணைந்த கரங்கள் அமைப்பினால், கமு/திகோ/திராய்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை என்பன வழங்கும் நிகழ்வு இன்று ஆசிரியர் ஏ.எல்.பத்திமா சிபா தலைமையில் இடம்பெற்றது.

திருக்கோவில் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் அதிகஸ்ட தொழில் வாய்ப்பற்று வாழும் குடும்ப மாணவர்கள் கல்வி கற்கும் கமு/திகோ/திராய்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் (40) மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்களான கே. விஜிதரன், திருமதி. ந. பவாணி ஆகியோரும் இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர்களான லோ.கஜரூபன், எஸ்.காந்தன், சி.துலக்சன், என்.லிரோஸ்காந், கே.ஜெயந்தன், எஸ்.சிருஸ்காந், டீ. தஜன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்தனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :