தோப்பூரில் இலங்கை வங்கி கிளையில் ஏடிஎம் இயந்திரம் நிறுவக்கோரி இலங்கை வங்கி தலைவருடன் எம் எஸ் தௌபீக் எம்.பி சந்திப்பு.



எப்.முபாரக் -
தோப்பூரில் இலங்கை வங்கி கிளையில் ஏடிஎம் இயந்திரம் நிறுவக்கோரி இலங்கை வங்கி தலைவருடன் எம் எஸ் தௌபீக் எம்.பி சந்திப்பு.

தோப்பூர் இலங்கை வங்கி கிளையில் ஏடிஎம் இயந்திரம் நிறுவுவது தொடர்பாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தௌபீக் மற்றும் இலங்கை வங்கி தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சி. பெரேராவிற்கும் இடையிலான சந்திப்பானது நேற்று (29) இலங்கை வங்கி தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் அவசர தேவையின் போது ஏடிஎம் இயந்திரத்தில் பணம் பெறுவதற்கு சுமார் 15 கிலோ மீற்றருக்கு அப்பாலுள்ள மூதூர் நகருக்கு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக பிரதேச மக்களால் ஏடிஎம் இயந்திரம் ஒன்றினை நிறுவுமாறு கோரி கையொப்பம் இடப்பட்ட கோரிக்கை கடிதம் இலங்கை வங்கிக்கு அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாகவே இச்சந்திப்பு இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது தோப்பூர் இலங்கை வங்கி கிளையில் ஏடிஎம் இயந்திரம் பொருத்துவதற்கு விரைவில் நடவடிக்கையை மேற்கொள்வதாக இலங்கை வங்கியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :