கிழக்கு மாகாணத்தில் குடி நீர் விருத்தி தொடர்பான கலந்துரையாடல்



ஹஸ்பர்-
கிழக்கு மாகாணத்தில் குடி நீர் விருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நீர்வழங்கல் அமைச்சில் (25) இடம் பெற்றது.
கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் மாகாண பிரதம செயலாளர் மற்றும் பிற அமைச்சக அதிகாரிகள் ஆகியோர் நீர்வழங்கல் அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களை சந்தித்து, கிழக்கு மாகாணத்தில் நீர் விநியோகத்தை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

இக்கலந்துரையாடலில் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள நீர்விநியோக பிரச்சினையை சரிசெய்ய, உள்ளூராட்சி மன்றங்களுக்கு புதிய தண்ணீர் குழாய்களை வழங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் விருப்பம் தெரிவித்தார்.

மேலும் உள்ளூராட்சி மன்றத்தின் ஊடாக நீர்குழாய்கள் மக்கள் பாவனைக்கு வழங்கப்படும் என தெரிவித்ததுடன், இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரமேஷ்வரன் அவர்களும் கலந்து கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :