சுவாமி விபுலானந்த அடிகளாரின் நூற்றாண்டு துறவற தினவிழா பிரகடனம்!



காரைதீவு சகா-
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் நூற்றாண்டு துறவற தின விழா பிரகடனம் காரைதீவில் பிரகடனப்படுத்தப்பட்டது.

காரைதீவு சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் அமைந்துள்ள விபுலானந்த திருவுருவச்சிலை முன்னிலையில் இப் பிரகடனம் சிறப்பாக இடம்பெற்றது.
சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த பணிமன்ற முன்னாள் தலைவர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அவரிடம் பணிமன்ற தலைவர் வெ.ஜெயநாதன் சுவாமி விபுலானந்த அடிகளாரின் ஆக்கங்கள் அடங்கிய நூலையும் ,அடிகளாரின் திருவுருவப் படத்தையும் விழா துவக்க முத்திரையாக கையளித்தார்.
துறவற நூற்றாண்டு விழா பிரகடனத்தை முன்னாள் தலைவர் வி.ரி.சகாதேவராஜா வாசித்து உரையாற்றி பிரகடனப்படுத்தினார்.

துறவற நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத் திட்டங்கள் பற்றிய திட்டமிடலை பணிமன்றம் இன்றிலிருந்து மேற்கொள்ள வேண்டும் என பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜன் கேட்டுக் கொண்டார்.

கணக்காய்வாளர் வி.குலேந்திரன் உள்ளிட்ட பணிமன்ற நிருவாகிகள் மற்றும் நடன மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
பணிமன்ற செயலாளர் கு.ஜெயராஜி நன்றியுரையாற்றினார்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :