முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் நூற்றாண்டு துறவற தின விழா பிரகடனம் காரைதீவில் பிரகடனப்படுத்தப்பட்டது.
காரைதீவு சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் அமைந்துள்ள விபுலானந்த திருவுருவச்சிலை முன்னிலையில் இப் பிரகடனம் சிறப்பாக இடம்பெற்றது.
சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த பணிமன்ற முன்னாள் தலைவர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அவரிடம் பணிமன்ற தலைவர் வெ.ஜெயநாதன் சுவாமி விபுலானந்த அடிகளாரின் ஆக்கங்கள் அடங்கிய நூலையும் ,அடிகளாரின் திருவுருவப் படத்தையும் விழா துவக்க முத்திரையாக கையளித்தார்.
துறவற நூற்றாண்டு விழா பிரகடனத்தை முன்னாள் தலைவர் வி.ரி.சகாதேவராஜா வாசித்து உரையாற்றி பிரகடனப்படுத்தினார்.
துறவற நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத் திட்டங்கள் பற்றிய திட்டமிடலை பணிமன்றம் இன்றிலிருந்து மேற்கொள்ள வேண்டும் என பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜன் கேட்டுக் கொண்டார்.
கணக்காய்வாளர் வி.குலேந்திரன் உள்ளிட்ட பணிமன்ற நிருவாகிகள் மற்றும் நடன மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
பணிமன்ற செயலாளர் கு.ஜெயராஜி நன்றியுரையாற்றினார்.
துறவற நூற்றாண்டு விழா பிரகடனத்தை முன்னாள் தலைவர் வி.ரி.சகாதேவராஜா வாசித்து உரையாற்றி பிரகடனப்படுத்தினார்.
துறவற நூற்றாண்டில் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத் திட்டங்கள் பற்றிய திட்டமிடலை பணிமன்றம் இன்றிலிருந்து மேற்கொள்ள வேண்டும் என பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜன் கேட்டுக் கொண்டார்.
கணக்காய்வாளர் வி.குலேந்திரன் உள்ளிட்ட பணிமன்ற நிருவாகிகள் மற்றும் நடன மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
பணிமன்ற செயலாளர் கு.ஜெயராஜி நன்றியுரையாற்றினார்.
0 comments :
Post a Comment