கிரிக்கெட் சீருடை வெளியிட்டு வைபவம்.



காரைதீவு சகா-
காரைதீவு விளையாட்டு கழகத்தின் கிரிக்கெட் அணியினருக்கான புதிய சீருடை வெளியீட்டு வைபவம் நேற்று (10) மாலை நடைபெற்றது.

காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் தலைவர் தம்பிராசா தவக்குமார் தலைமையில் கழக தலைமையகத்தில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக கழகப் போசகரும், உதவிக் கல்விப் பணிப்பாளருமான வி.ரி.சகாதேவராஜா கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கழக முன்னாள் தலைவர்களான சி. நந்தகுமார், கே சசிகரபவன் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து சிறப்பித்தார்கள்.

கழக நீண்ட கால உறுப்பினர் தில்லையம்பலம் தயாகரன்( துபாய்) இச்சீருடைக்கான அனுசரணையாளராகவிருந்து அவற்றை அன்பளிப்பு செய்திருந்தார் .
அவர் சார்பாக அவரது மைத்துனர் என்.சுபதீபன் கலந்து சிறப்பித்தார். கழகச் செயலாளர் கே.கிருஷாந்த் நன்றி உரையாற்றினார்.
கிரிக்கெட் அணித் தலைவர் பி.சுலக்சன் உள்ளிட்ட வீரர்களுக்கு சீருடை வழங்கி வைக்கப்பட்டது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :