ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வருகை தரும் கிளினீக் நோயர்களுக்கான தனியான ஒரு பிரிவாக இன்று கிளினீக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.
வைத்தியசாலை அத்தியட்சகர் டொக்டர் S.சசிகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் டொக்டர் G.சுகுணன் கலந்து கொண்டு புதிய கிளீனிக் பிரிவினை அங்குராப்பணம் செய்து வைத்தார்.
மேற்படி நிகழ்வில் சுகாதார பணிமனையின் உத்தியோகத்தர்கள்,நோயாளர்கள் ,
வைத்தியசாலை நிருவாகத்தினர் என பலர் கலந்து சிறப்பித்ததுடன் புதிய கிளினீக் கட்டிட தொகுதி அமைக்கப்பட்டுள்ளதால்
நோயாளர்கள் மகிழ்ச்சி அடைவதுடன் வைத்தியசாலை நிருவாகத்தினருக்கும் நன்றிகளையும் தெரிவித்தனர்...
0 comments :
Post a Comment